Saturday, 11th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கொடைக்கானல்: கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் ஆம்னி வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
கொடைக்கானலில் இம்ரான் பிரியாணி கடை நடத்தி வரும் ரஹ்மத்துல்லா என்பவர் தனது உறவினரின் திருமணத்திற்காக குடும்பத்தினருடன் வத்தலக்குண்டு பகுதிக்கு சென்றுள்ளார். திருமணத்தை முடித்துவிட்டு நள்ளிரவில் மீண்டும் கொடைக்கானலுக்கு திரும்பிக் கொண்டிருந்த அவரது ஆம்னி வேன், வெள்ளிநீர் வீழ்ச்சி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள், 100 அடி பள்ளத்தில் இருந்தவர்களை மீட்டனர். இந்த விபத்தில் ரூபி, ராசிக் பரித் ஆகிய 2 உயிரிழந்த நிலையில், ரஹ்மத்துல்லா, சாதிக் உள்ளிட்ட 4 பேர் பலத்த காயமடைந்தனர்.
அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தேனி கானா விலக்கு பகுதிக்கு அனுப்பப்பட்டனர். கொடைக்கானிலில் மழை பெய்து வருவதால், சுற்றுலா வரும் பயணிகளும், பொதுமக்களும் பாதுகாப்புடன் வாகனத்தில் செல்ல வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.